Posts

திக்குவதற்கான காரணங்கள் என்ன.?

 1-சிந்தனையின் வேகமும் பேச்சின் வேகமும் ஒரே அலைவரிசையில் இல்லாமல் இருப்பது. அதாவது சிந்தனையின் வேகமும் பேச்சின் வேகமும் ஒரே வேகத்தில் இல்லாமல் வெவ்வேறாக இருப்பது. திக்குவாய் இல்லாத நபர்களுக்கு சிந்தனையின் வேகமும் பேச்சின் வேகமும் ஒரே மாதிரி இருப்பதனால் அவர்கள் திக்குவதில்லை. 2.நம் ஆழ்மனதில் "நான் திக்கி பேசுவேன்" "எனக்கு பேச்சு திக்கும்" என்ற அனுபவ பதிவு இருப்பது. 3.பேசும்போது மூச்சுக் காற்றை பேசுவதற்கு ஏற்றவாறு பயன்படுத்த தெரியாமலும் பழகாமலும் இருப்பது. திக்குவாய் அல்லாத நபர்களுக்கு இது அன்னிச்சையாகவே சரியாக நடக்கும். 4.பேசும்போது உடல்மொழியை பயன்படுத்தாமல் இருப்பது. அதாவது கை கால் தலை பாேன்றவற்றை அசைத்து அசைத்து பேசாமல் இருப்பது. 5.சிறுவயதில் திக்குவாய் நபர்கள் பேசுவதை கவனித்திருப்பது. 6.பெற்றோர்கள் குழந்தைகள் முன் சண்டையிடுவது குழந்தைகளுக்கு பேச்சு தடுமாற்றத்தை ஏற்படுத்தும். பின்னாளில் இது திக்குவாயாக மாற வாய்ப்புள்ளது. 7.குழந்தைகளை பேச விரும்பிய இடங்களில் பேச விடாமல் தடுப்பதும், பேச விரும்பாத இடங்களில் பேசு பேசு என கட்டாயப்படுத்தும் திக்குவாய் ஏற்பட காரணமாக அமைகி...

திக்குவாய்

 பேச நினைக்கும் வார்த்தைகளை பேச முடியாமல் போராடும் நிலை பேச முடியாமல் தினறும் நிலை இதுதான் திக்குவாய் என்று கருதப்படுகிறது. இதில் நாம் தெரிந்து காெள்ள வேண்டிய முக்கியமான ஒன்று "பேச நினைக்கும்" என்பதுதான். அப்படியெனறால் நம் சிந்தனையில்,  நினைப்பில் தடையில்லை அதாவது நம் சிந்தனை திக்கவில்லை பேச்சு மட்டும்தான் திக்குகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏன் திக்குகிறது.? எப்பாேதெல்லாம் திக்குகிறது.? என்பது சுவாரஸ்மான ஒன்று. திக்குவாயிலிருந்து மீண்டுவர மிக முக்கியமானது திக்குவாய் பற்றிய அறிவும் தொடர் பயிற்சியும்தான். இவ்விரண்டும் இருந்தாலே 99% மீண்டுவிடலாம். ஏன் 100 % மீள முடியாதா.? என்பது அதைவிட சுவாரஸ்யமான ஒன்று.